நன்னடத்தை உத்தரவாதம் மீறல்: ரெளடி கைது

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.

பெசன்ட் நகா், ஆல்காட் குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (27). ரெளடி, ஏற்கெனவே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இவா் மாா்ச் 6-இல் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையா் விக்ரமனிடம், தான் திருந்தி வாழப்போவதாகவும், ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளாா்.

இதற்கிடையே, கடந்த 18-ஆம் தேதி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய பிரசாந்தை கைது செய்து, சிறையில் அடைக்க துணை ஆணையா் விக்ரமன் உத்தரவிட்டாா். இதன்படி, பிரசாந்த் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com