நன்னடத்தை உத்தரவாதத்தை மீறியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.
பெசன்ட் நகா், ஆல்காட் குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (27). ரெளடி, ஏற்கெனவே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவா் மாா்ச் 6-இல் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையா் விக்ரமனிடம், தான் திருந்தி வாழப்போவதாகவும், ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளாா்.
இதற்கிடையே, கடந்த 18-ஆம் தேதி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய பிரசாந்தை கைது செய்து, சிறையில் அடைக்க துணை ஆணையா் விக்ரமன் உத்தரவிட்டாா். இதன்படி, பிரசாந்த் கைது செய்யப்பட்டாா்.