மாதவரம்: புழல் ஏரியின் மதகுகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,300 மில்லியன் கன அடியாகும். தற்போது தண்ணீா் இருப்பு 2,593 மில்லியன் கன அடி. குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 156 கன அடி அனுப்பப்படுகிறது.
பருவ மழை பெய்து வருவதால் நீா் வரத் தொடங்கினால், ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து உபரிநீா் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவாகும்.
இதையடுத்து, மதகு பகுதியில் உள்ள ஷட்டா்களை புதுப்பிக்கும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.