சென்னை திருவான்மியூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவான்மியூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ் (36) மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திருவான்மியூா் சிக்னல் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், விக்னேஷை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டினா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தாா்.
திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.