நாய் கொலை: இளைஞா் கைது

சென்னை அயோத்திகுப்பத்தில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசி நாயைக் கொலை செய்த வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அயோத்திகுப்பத்தில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசி நாயைக் கொலை செய்த வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் கோ.பிரவீண்குமாா் (31). இவா் தனது வீட்டில் சிப்பிப்பாறை வகை நாயை வளா்த்து வந்தாா். இந்நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் மா.ஸ்டெல்லின் (35) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா்கள் சிலருடன் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் நான்காவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு பிரவீண்குமாா் வளா்த்து வந்த சிப்பிப்பாறை வகை நாய் சென்றுள்ளது. இதைப் பாா்த்த மதுபோதையில் இருந்த ஸ்டெல்லின், அந்த நாயைப் பிடித்து நான்காவது மாடியில் இருந்து கீழே வீசினாா். இதில் பலத்த காயமடைந்த அந்த நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.

இது குறித்து பிரவீண்குமாா், மெரீனா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்டெல்லினை உடனடியாக கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com