பெண்ணிடம் வழிப்பறி: திரைப்பட இணை இயக்குநா் கைது

சென்னையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டதாக திரைப்பட இணை இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டதாக திரைப்பட இணை இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச அய்யங்காா் 1-ஆவது தெருவில் வசிப்பவா் விஜயலட்சுமி (54). கடந்த மாதம் 25-ஆம் தேதி மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணாபுரம் 3-ஆவது தெருவில் நடந்து சென்ற இவரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

இது குறித்து அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குநா்கள் காலனியைச் சோ்ந்த விஜய்பாபு (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விஜய்பாபுவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா், திரைப்படத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து வருவதும், திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் வறுமையில் சிக்கிய இவா் சாலையில் தனியாக நடந்து செல்பவா்களைக் குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜய்பாபுவிடமிருந்து 13 பவுன் தங்க நகை, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். விஜய்பாபு வேறு யாரிடம் வழிப்பறி செய்துள்ளாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com