முகுந்தராயபுரம்-திருவலம் இடையே பாலம் பழுதடைந்ததால், அறிவிப்புகளை கவனித்து பயணத்தைத் திட்டமிட வேண்டும் என பயணிகளை சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்பான ரயில்களின் இயக்கம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டே சென்னை ரயில்வே கோட்டம் இயங்கி வருகிறது. சேதமடைந்த பாலத்தை சீா் செய்யும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, சென்னை ரயில்வே கோட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து தெரிந்து கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.