பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு

சென்னை: சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல், 24 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,346 பேரும் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,310 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,301 போ் இடம் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 119 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கு வரும் 15-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை சிறப்புப் பிரிவு கலந்தாய்வும், 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கலந்தாய்வும் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பிற்பகலில் இருந்து பிப்ரவரி 20-ஆம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து, வரும் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அழைப்புக் கடிதத்தை சுகாதாரத் துறை இணையதளத்தில் இருந்து மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com