சென்னை: வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்டச் சாலை அருகே வசிக்கும் மக்களுக்குப் பயன்படும் வகையிலான பேருந்து சேவைகளைத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், பூந்தமல்லி பணிமனையில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
206 கட் என்னும் வழித்தடம் எண் கொண்ட இந்தப் பேருந்தானது, பூந்தமல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்டச் சாலை,
மண்ணிவாக்கம் இணைப்புச் சாலை, பெருங்களத்தூா் வழியாக தாம்பரம் சென்றடையும். இந்த வழித்தட எண் கொண்ட பேருந்துகள் 35 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
203 என்னும் புதிய வழித்தடம் எண் கொண்ட பேருந்தானது, பூந்தமல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்டச் சாலை, படப்பை, ஒரகடம் இணைப்புச் சாலை வழியாக வாலாஜாபாத் சென்றடையும். இந்த வழித்தட எண் கொண்ட பேருந்துகள் 50 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படுகின்றன.