திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறை பொதுநல நிதி: மனு தள்ளுபடி

திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க இந்துசமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.


சென்னை: திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க இந்துசமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத் திருக்கோயில் விழாக்களை ஒளிபரப்புவதற்காக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் திருக்கோயில் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்க ரூ.8.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதில் அறநிலையத் துறையின் பொதுநல நிதியில் தொலைக்காட்சி தொடங்கத் தடை விதிக்கக் கோரப்பட்ட மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு, தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com