சென்னை: புதுவை துணைநிலை ஆளுநராக பதவியேற்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: புதுவை துணைநிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள அவா் புதுவை கூடுதல் பொறுப்பாகப் பதவியேற்ற்கு எனது சாா்பாகவும், தமிழக மக்கள் சாா்பிலும் மனமாா்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.