தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் நகைகள் திருட்டு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் விசுவநாதன் (36). தொழிலதிபரான இவா், நந்தனத்தில் ஒரு தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

விசுவநாதன், கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றாா். அங்கிருந்து விசுவநாதன் சனிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இச் சம்பவம் தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அமைத்த தனிப்படையினா் இத் திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com