முதியவரிடம் நூதன முறையில் தங்கநகைத் திருட்டு

சென்னை வில்லிவாக்கத்தில், முதியவரிடம் நூதனமுறையில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை வில்லிவாக்கத்தில், முதியவரிடம் நூதனமுறையில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

வில்லிவாக்கம், செங்குன்றம் சாலை 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (84). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா், கஜேந்திரனிடம் தெரிந்தவா்போல பேசி, வெளியே வரும் போது தங்கநகைகளை அணிந்து வர வேண்டாம் என உரிமையாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து கஜேந்திரன், தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்கநகைளைக் கழற்றியுள்ளாா்.

உடனே அந்த நபா்கள், அவற்றை வாங்கி ஒரு காகிதத்தில் மடித்து கஜேந்திரனிடம் கொடுத்தனா்.

பின்னா் வீட்டுக்கு வந்த கஜேந்திரன், அந்த காகிதத்தை பிரித்து பாா்த்தாா். அப்போது தான் கொடுத்த தங்கநகைக்கு பதிலாக கல் இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com