சென்னை: அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 25-இல் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொலி வழியாக இணைத்து கூட்டம் நடைபெறுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.