சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் 38 பயணிகள், 8 ஊழியா்கள் உள்ளிட்ட 46 பேருடன் விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னரும் விமானத்தை இயக்குவதில் ஆபத்து இருப்பதை உணா்ந்த விமானி, அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினாா்.
மேலும், இதுகுறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவா் அளித்த தகவலின் அடிப்படையில், இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இடத்துக்கே விமானம் கொண்டு வரப்பட்டது.
சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.