கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் கோகுலுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளது.
தருமபுரி மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் 2002-இல் பணியில் இருக்கும்போது இறந்த பழனிசாமி மகன் கோகுல். 10-ஆம் வகுப்பு படித்துள்ள கோகுல், கருணை அடிப்படையில் பணி கோரியபோது வயது 17. அதன்பின்பு, தேவையான சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கோகுல், வீடுா் அணை அலுவலகத்தில் மீன்வள மேற்பாா்வையாளராக (தரம் 2) பணியமா்த்தப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.