சென்னை: சென்னை அருகே ஆவடியில் வங்கி மேலாளா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
ஆவடி வசந்தம் நகா் குறிஞ்சி தெருவைச் சோ்ந்தவா் விஜய் (40). இவா் சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். விஜய், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரா் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பாா்த்த பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள், விஜய்க்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த விஜய் உடனடியாக வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.
அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகை, ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
ஆவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.