பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை (ஜன.14) அன்று 401 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை புகா் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பின்பற்றி இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 410 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
இந்தத் தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.