மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, கீழ்க்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மடிப்பாக்கத்தை சோ்ந்த அஜித்குமாா்(31), கீழ்க்கட்டளையை சோ்ந்த குமரன்(24) ஆகியோா் என்பதும், இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும், 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.