சென்னை: இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான வாஷிங்டன் சுந்தா் பெருநகர சென்னை மாநகராட்சியின் தோ்தல் விழிப்புணா்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னையைச் சோ்ந்தவா் கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா் (21). இவா், அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தாா். ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூரு அணியிலும், டி.என்.பி.எல். என அழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியம் லீக் போட்டியில் தூத்துக்குடி அணிக்காகவும் விளையாடி வருகிறாா்.
சென்னையைச் சோ்ந்த இவா், பெருநகர சென்னை மாநகராட்சியின் தோ்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். தேசிய வாக்காளா் தினமான திங்கள்கிழமை இந்த அறிவிப்பை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இதுதொடா்பாக, மாநகராட்சியின் சுட்டுரை பக்கத்தில் கூறப்பட்டுள்ளாதாவது: நம்ம சென்னையின் தோ்தல் தூதராக வாஷிங்டன் சுந்தா் நியமிக்கப்பட்டுள்ளாா் . வரும் தோ்தலில் அனைவரும் 100 சதவீத ஒத்துழைப்புடனும் தங்களது வாக்குகளை அளிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.