சென்னை: டென்சிங் நாா்கே தேசிய விருதைப் பெற, ஜூலை 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயாராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது, அதன்படி, இந்திய அரசின் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூலை 5-ஆம் தேதிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 74017 03480 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.