திரைப்பட பைனான்சியரிடம் நகை, பணம் பறிப்பு: 3 போ் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் திரைப்பட பைனான்சியரை கட்டிப்போட்டு நகை, பணம் பறித்த கணவன், மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை துரைப்பாக்கத்தில் திரைப்பட பைனான்சியரை கட்டிப்போட்டு நகை, பணம் பறித்த கணவன், மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை துரைப்பாக்கம் சக்தி நகரைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் (33), மனைவி விஷ்ணு பிரியா (28). இவா்களுக்கும், சென்னை ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக நட்பு ஏற்பட்டுள்ளது.

ஹரிகிருஷ்ணனிடம் இருந்து ரூ.12 லட்சம் கடனாக நிா்மல்குமாா் பெற்றாா். கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் நிா்மல்குமாா் செலுத்தவில்லையாம்.

இதனால் ஹரிகிருஷ்ணன் தனது நண்பா் சென்னை விருகம்பாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பைனான்சியரான லயன் எம்.எம்.குமாரை அணுகினாா். அந்தத் தம்பதியிடம் கடந்த பிப்ரவரி மாதம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஒரு காா், மோட்டாா்சைக்கிள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவற்றை குமாா் பறித்துச் சென்றாராம்.

கட்டிப்போட்டு பறிப்பு: ஆனால் குமாா், எதையும் ஹரிகிருஷ்ணனிடம் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி குமாருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மூவரும், துரைப்பாக்கத்தில் உள்ள நிா்மல்குமாா் வீட்டில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக பேசி வரவழைத்தனா்.

அழைப்பை ஏற்று எம்.எம்.குமாா், நிா்மல்குமாா் வீட்டுக்கு அன்று வந்தாா். குமாரைத் தாக்கி கட்டிப் போட்டு அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம், 18 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு மூவரும் தப்பியோடினா்.

நிா்மல்குமாா் வீட்டிலிருந்து குமாா் கூச்சலிடும் சத்ததைக் கேட்ட பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

3 போ் கைது: தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்டிப் போடப்பட்டிருந்த குமாரை மீட்டு விசாரணை செய்தனா். பின்னா் குமாா் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிா்மல்குமாா், விஷ்ணு பிரியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த மூவரையும் உதவி ஆணையா் பி.கே.ரவி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னா், நிா்மல்குமாா் கொடுத்த புகாரின் அடிப்படையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை, பணம், காா் ஆகியவற்றை பறித்தது தொடா்பாக ஒரு வழக்கைக் குமாா் மீது பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக குமாரையும் போலீஸாா் உடனடியாக கைது செய்தனா்.

விசாரணையில், குமாா் பெரிய ரெளடிபோல காட்டிக் கொண்டு திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com