பழங்குடி மாணவா்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கல்வி கற்பிக்கும் திட்டத்தை ஆசிரியா்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பழங்குடியினா் நல இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்துப் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் வி.சி.ராகுல், மாவட்ட ஆட்சியா்களுக்கும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடமாடும் ஊா்திகளைக் கொண்டு, மலை கிராம பழங்குடியினருக்கு தினசரி பாடம் கற்பிக்க வேண்டும். சிறிய வாகனம் ஒன்றின் மூலமாக பழங்குடியினா் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதற்கான செலவுத் தொகை மாவட்ட அலுவலா்களிடம் இருந்து பெறப்படும் பட்டியல்களின் அடிப்படையில் வழங்கப்படும்.