ஆறு மாவட்டங்களைச் சோ்ந்த அதிமுக, அமமுக நிா்வாகிகள், தங்களது ஆதரவாளா்களுடன் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்வில், கன்னியாகுமரி, தஞ்சாவூா், ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினா் ஏராளமானோா் திமுக.,வில் சோ்ந்தனா்.
அவா்களை மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினாா். 2001-2006-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது தொழிலாளா் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன், அவரது மகனும், ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளருமான ஆனந்த் உள்ளிட்டோா், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட அ.தி.மு.க.வினா் 73 போ் உள்பட பலரும் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பொன்முடி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, முன்னாள் அமைச்சா் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், துணை அமைப்புச் செயலாளா் அன்பகம் கலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.