வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: ரெளடி கைது

சென்னையில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை: சென்னையில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக, ரெளடி கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (29). இவா், வியாசா்பாடி பெரியாா் நகா் பகுதியில் உப்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை கடையில் இருந்து ஒரு சுமை ஆட்டோவில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சோ்ந்த ரெளடி மகேஷ்குமாா் (29) மதுபோதையில், கருப்பசாமியை திடீரென அரிவாளால் வெட்டினாா்.

அதன் பின்னா், அங்குள்ள ஒரு இறைச்சிக் கடைக்குள் சென்று, அங்கிருந்த பொருள்களை அரிவாளால் அடித்து நொறுக்கினாா்.

இது குறித்து தகவலறிந்த செம்பியம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு அட்டகாசம் செய்து கொண்டிருந்த ரெளடி மகேஷ்குமாரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com