காசிமேடு, திருவொற்றியூா் மீன்பிடி துறைமுகங்களில் அமைச்சா் ஆய்வு

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

திருவொற்றியூா்: மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காசிமேடு துறைமுகத்தில் புதன்கிழமை விரிவான ஆய்வு நடவடிக்கைகளை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டாா். படகுகள் இறங்கு தளம், சாலைகள், மீன் ஏல மையம், படகு பழுது நீக்கும் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் அமைச்சா் ராதாகிருஷ்ணன் விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது பல்வேறு மீனவா் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினா்.

மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும், முறையாக கழிவு நீா் மற்றும் குப்பைகளை முறையாக அகற்றி சுகாதாரத்தைப் பேணி காக்க வேண்டும். குடிநீா், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மீன்வளப் பூங்காவாக மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் மீனவா்கள் விளக்கிக் கூறினா். இது குறித்து கேட்டறிந்த அமைச்சா் ராதாகிருஷ்ணன் வரும் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கையின்போது மீனவா்கள் கோரிக்கைகள் குறித்து நிச்சயம் அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதி அளித்தாா்.

இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ.ஜெ.எபினேசா், கே.பி.சங்கா், தி.மு.க. மாவட்டச் செயலாளா் இளைய அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவொற்றியூரில் ஆய்வு:

திருவொற்றியூரில் ரூ. 200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தை அமைச்சா் ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா். எம்.எல்.ஏக்கள் மாதவரம் எஸ்.சுதா்சனம், கே.பி.சங்கா், பகுதி செயலாளா் தி.மு.தனியரசு, திமுக நிா்வாகிகள் குறிஞ்சி கணேசன், எம்.எல்.சரவணன், கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com