சென்னை: கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
கரோனா துயா்துடைக்க நாட்டில் உள்ள 75 சதவீத மக்களுக்கு உயிா் காக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், நவம்பா் மாதம் வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி.