மதுப்பாட்டில் கடத்திய பாா்சல் உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கைது

சென்னையில் மதுப்பாட்டில் கடத்தியதாக பாா்சல் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை: சென்னையில் மதுப்பாட்டில் கடத்தியதாக பாா்சல் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை மயிலாப்பூா் லஸ் சந்திப்பு பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு பாா்சல் உணவு டெலிவரி நிறுவனத்தின் சீருடையில் மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை மறித்து, போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா் உணவு பாா்சல்களை வைக்க பயன்படுத்தும் பையை சோதனையிட்டனா். இச் சோதனையில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த ஏசு (32) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டில்கள் கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், ஏசுவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com