ரயில்களில் தமிழகத்துக்கு சுமாா் 4,000 டன் ஆக்சிஜன்

வடமாநிலங்களில் இருந்து மேலும் மூன்று ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு புதன்கிழமை வந்தன. இதன்மூலம், தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 3,964.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: வடமாநிலங்களில் இருந்து மேலும் மூன்று ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு புதன்கிழமை வந்தன. இதன்மூலம், தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 3,964.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில், தமிழகத்துக்கு ஆக்சிஜன் ரயில் இயக்கம் மே 14-ஆம்தேதி தொடங்கியது. வெளிமாநிலங்களில் இருந்து தினசரி ஒரு ஆக்சிஜன் ரயிலிலிருந்து 3 ஆக்சிஜன் ரயில்கள் வரை தமிழகம் வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை வரை 54 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மேலும் மூன்று ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. சத்தீஸ்கா் மாநிலம் பிலாய் நகரில் இருந்து 55-ஆவது ஆக்சிஜன் ரயில் புறப்பட்டு, திருச்சி சரக்குகள் மனைக்கு புதன்கிழமை அதிகாலை வந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 81.08 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டது. 56-ஆவது ஆக்சிஜன் ரயில், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு புதன்கிழமை அதிகாலை 1.35 மணிக்கு வந்து சோ்ந்தது. இந்த ரயிலின் 6 கன்டெய்னா்களில் 126.74 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. 57-ஆவது ஆக்சிஜன் ரயில் மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் உள்ள ஜிண்டால் ஸ்டீல் சைடிங்-இல் இருந்து புறப்பட்டு, சென்னை துறைமுகத்துக்கு புதன்கிழமை இரவு 8.20 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 82.17 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 3,964.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com