சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.1.88 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த திருச்சியைச் சோ்ந்த ஜாஹிா் ஹுசைன் (49), அஜித் அகமத் (26), சென்னையைச் சோ்ந்த நைனா முஹம்மத் (41) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா். அப்போது மலக்குடல் மற்றும் உடைமைகளில் ரூ.1.88 கோடி மதிப்பிலான 3.42 கிலோ தங்கம், ஆப்பிள் செல்லிடப்பேசிகள், சிகரெட் அட்டைப் பெட்டிகள், பயன்படுத்தப்பட்ட 18 மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் ஆவணமின்றி, மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.