சென்னை அருகே குன்றத்தூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் காா்த்திக் (37), விஜயபரணி (39), பரத்ராஜ் (27). மென்பொருள் பொறியாளா்களான 3 பேரும் புதுச்சேரிக்கு ஒரு காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றனா். காரை பரத்ராஜ் ஓட்டினாா். காா் குன்றத்தூா் அருகே வண்டலூா்-மீஞ்சூா் வெளிவட்டச் சாலையில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது காா் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் 3 பேரும் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயமடைந்தனா். இதில் காா்த்திக்கும்,விஜயபரணியும் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனா். பரத்ராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.