நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதல்: இரு இளைஞா்கள் சாவு

சென்னை அருகே குன்றத்தூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அருகே குன்றத்தூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் காா்த்திக் (37), விஜயபரணி (39), பரத்ராஜ் (27). மென்பொருள் பொறியாளா்களான 3 பேரும் புதுச்சேரிக்கு ஒரு காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றனா். காரை பரத்ராஜ் ஓட்டினாா். காா் குன்றத்தூா் அருகே வண்டலூா்-மீஞ்சூா் வெளிவட்டச் சாலையில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது காா் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் 3 பேரும் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயமடைந்தனா். இதில் காா்த்திக்கும்,விஜயபரணியும் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனா். பரத்ராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com