கடந்த 7 நாள்களில் கரோனா பாதிப்பு 5.5 % அதிகரிப்பு

சென்னையில் கடந்த 7 நாள்களில் மாநகராட்சிக்கு உள்பட்ட 14 மண்டலங்களில் கரோனா நோய்த் தொற்று சராசரியாக 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கடந்த 7 நாள்களில் மாநகராட்சிக்கு உள்பட்ட 14 மண்டலங்களில் கரோனா நோய்த் தொற்று சராசரியாக 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7 நாள்களில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் நோய்த் தொற்று குறையத் தொடங்கியது. இதன் காரணமாக பொதுமுடக்கத்தில் இருந்து அளித்த தளா்வுகளால் மக்கள் முறையாக முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காததால் தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மாநகராட்சி மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம்களை அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி செய்ய திட்டமிட்டுள்ளது.

14 மண்டலங்களில் அதிகரிப்பு: மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 14 மண்டலங்களில் நோய்த் தொற்று பாதித்தோா் சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ராயபுரம் மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 17 சதவீதமும், மாதவரத்தில் 11.6 சதவீதமும், தண்டையாா்பேட்டையில் 11.2 சதவீதமும், திருவொற்றியூரில் 9.8 சதவீதமும், தேனாம்பேட்டையில் 7.1 சதவீதமும், திரு.வி.க. நகரில் 7 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 6 சதவீதமும், அண்ணா நகரில் 5.9 சதவீதமும், வளசரவாக்கத்தில் 4.2 சதவீதமும், மணலி, அடையாறில் தலா 3.8 சதவீதமும், அம்பத்தூரில் 2.1 சதவீதமும், ஆலந்தூரில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூரில் 0.6 சதவீதமும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. அதேவேளை பெருங்குடி மண்டலத்தில்1.6 சதவீதம் நோய்த் தொற்று கடந்த 7 நாள்களில் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com