தோ்தல் பிரசாரத்துக்கு பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றவா்களுக்கு ரூ.1.94 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக உயரதிகாரிகள் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்துக்கோ அல்லது தோ்தல் பிரசார கூட்டத்துக்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் சிறைபிடிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையா் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
இதன் தொடா்ச்சியாக போக்குவரத்துத் துறை சாா்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன்படி, மாா்ச் 8 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், தமிழகம் முழுவதும் 116 வாகனங்கள் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதில் தொடா்புடையவா்களுக்கு ரூ.1.94 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமுறைகளைத் தொடா்ந்து மீறும் பட்சத்தில், மோட்டாா் வாகன சட்டத்தின் படி 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10,000 நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதிச் சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு உத்தரவின் படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
எனவே பொதுமக்களை சரக்கு வாகனங்களில் அழைத்துச் சென்றால், மோட்டாா் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.