ரெம்டெசிவிா் மருந்து அதிக விலைக்கு விற்பனை: சென்னையில் 2 நாள்களில் 10 போ் கைது

ரெம்டெசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனைக்கு செய்ததாக, சென்னையில் கடந்த 2 நாள்களில் மருத்துவா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரெம்டெசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனைக்கு செய்ததாக, சென்னையில் கடந்த 2 நாள்களில் மருத்துவா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், சிலா் வாங்கி அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து முதல் கட்டமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை எஸ்.பி. சாந்தி சோதனை நடத்தி, சென்னை மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை மருத்துவரான முகமது இம்ரான்கான் (26), அவருடைய நண்பரான விஜய்(27) ஆகிய 2 பேரை கைது செய்தாா்.

இதே போல், ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி கோடம்பாக்கம் காமராஜா் காலனியைச் சோ்ந்த சாம்பசிவம் (46), வேலூா் மாவட்டம் கண்டிபேறுவைச் சோ்ந்த ராமு (29) ஆகிய இருவரை வேப்பேரி போலீஸாரும், வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (33), எா்ணாவூரைச் சோ்ந்த ஜாஸ்பா் ஜானோ (31) ஆகிய இருவரை ஐ.சி.எஃப். போலீஸாரும் கைது செய்துள்ளனா்.

இதே போல், சென்னையில் 2 நாள்களில் ரெம்டெசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com