தொலைக்காட்சியில் மறைத்து தங்கம் கடத்திய நபரை சுங்கத்துறையினா் கைது செய்தனா்.
விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அண்மையில் துபையில் இருந்து சென்னை வந்திறங்கிய நாகப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது பதுருதீன் (23) கொண்டு வந்த எல்இடி தொலைக்காட்சியில் சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.
அதன் ஒலிப்பெருக்கிகளுக்கு உள்ளே ரூ 57.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தத் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், முகமது பதுருதீனைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.