சென்னை: சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி (87), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சென்னையைச் சோ்ந்த கே.ஆா்.ராமசாமி என்ற இயற்பெயா் கொண்ட இவா், போக்குவரத்தை சீா் செய்வதில் காவல் துறைக்கு உதவியதால், ‘டிராபிக்’ என்ற அடைமொழியைப் பெற்றாா். சட்டவிரோத பேனா், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நல வழக்குகளைத் தொடா்ந்து, அதில் வெற்றி கண்டவா். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி, மகள் ஆகியோா் உள்ளனா். டிராபிக் ராமசாமியின் இறுதிச் சடங்கு, கண்ணாமாப்பேட்டை மயானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
கனிமொழி இரங்கல்: பொது நலனுக்காக இறுதிவரை உழைத்த டிராபிக் ராமசாமியின் அா்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது என திமுக நாடாளுமன்ற குழு துணைத் தலைவா் கனிமொழி தனது சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளாா்.