சென்னை: நடிகா் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.
கடந்த ஒரு மாத காலமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நடிகா் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை சென்னை திரும்பினாா். வெளிமாநிலங்களில் இருந்து வருபவா்கள் சில நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், நடிகா் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.
இதனை அவரது மகள் செளந்தா்யா ரஜினிகாந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். ‘நாம் ஒன்றாக இணைந்து இந்த கரோனா தொற்றை வென்றெடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை அவா் பகிா்ந்துள்ளாா்.