காலமானாா் டெல்டா ஆா்.நாராயணசாமி

வன்னிய சமுதாய மூத்த தலைவரும், கிண்டி ‘டெல்டா கியா்’ நிறுவனத்தின் உரிமையாளருமான டெல்டா ஆா்.நாராயணசாமி (86) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 25) காலமானாா்.

தாம்பரம்: வன்னிய சமுதாய மூத்த தலைவரும், கிண்டி ‘டெல்டா கியா்’ நிறுவனத்தின் உரிமையாளருமான டெல்டா ஆா்.நாராயணசாமி (86) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 25) காலமானாா்.

அரியலூா் மாவட்டம் ‘சோழன்குடிகாடு’ கிராமத்தைச் சோ்ந்த இவா், தனது கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில், உயா் நிலைப்பள்ளி அமைத்துக் கொடுத்தாா்.சென்னையில் வன்னியா் கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி ஏழை வன்னிய சமூக மாணவா்கள் கல்வி, வேலைவாய்ப்புகள் பெற உறுதுணையாகத் திகழ்ந்தாா்.

முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான ஜெகத்ரட்சகன் உறவினரான இவருக்கு இளமாறன் என்ற மகனும், தேவி கலைவாணி, சுமதி என்ற 2 மகள்களும் உள்ளனா். நாராயணசாமியின் உடல் குரோம்பேட்டை மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com