சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கடந்த இரு வாரங்களாக சேவையாற்றினா்.
சங்கர நேத்ராலயா மருத்துவா்கள் சுகனேஸ்வரி கணேசன், பாஸ்கா் மணி, கஜேந்திரகுமாா் வா்மா, சிவரஞ்சனி, ராதிகா ஸ்ரீராம் உள்பட செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் ஸ்டான்லி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவு, நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவா்களின் அயராத பணிகளுக்கு சற்று பங்களிக்கும் வகையில் கடந்த 13-ஆம் தேதி முதல் கரோனா சிகிச்சைப் பிரிவில் தாங்கள் சேவையாற்றியதாக அவா்கள் தெரிவித்தனா். இதற்காக சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுவினருக்கு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி பாராட்டுத் தெரிவித்தாா்.