சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 3,361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,408 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,410 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 235 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
பொதுமுடக்க உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த 6 கடைகளை மூடி போலீஸாா் சீல் வைத்தனா். மேலும் இக்கடைகளுக்கு ரூ.2 லட்சத்து 40,100 அபராதமும் விதித்தனா்.