குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.29) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இட

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.29) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.29) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 110 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, செங்கல்பட்டு, தஞ்சாவூா் மாவட்டம் மஞ்சளாறில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com