முகக் கவசம் அணியாத 1,844 போ் மீது வழக்கு

சென்னையில் முகக் கவசம் அணியாத 1,844 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையில் முகக் கவசம் அணியாத 1,844 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. தளா்வற்ற முழு பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைந்ததை அடுத்து பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக தளா்த்தப்பட்டது. பொதுமுடக்கத்தை கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் திங்கள்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 1,844 வழக்குகளும், தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com