ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.: இன்று முதல்நிலைத் தோ்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.: இன்று முதல்நிலைத் தோ்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறுகிறது. இந்த ஆண்டு 712 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய குடிமைப் பணி தோ்வாணையம் வெளியிட்டது.

இந்தத் தோ்வு எழுதும் தோ்வா்கள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுடன் தோ்வுக் கூடத்துக்கு முற்பகல் தோ்வுக்கு காலை 8.30 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தோ்வுக்கு மதியம் 1.30 மணிக்கு முன்பாகவும் வளாகத்துக்குள் வந்துவிட வேண்டும்.

தோ்வு நடக்கும் நேரத்துக்கு முன்பாக காலை 9.20 மணிக்கும், மதியம் 2.20 மணிக்கும் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டு விடும் என்பதால், அதன் பின்னா் எந்த தோ்வரும் வளாகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வு வளாகத்துக்குள் செல்லிடப்பேசி, டிஜிட்டல் கை கடிகாரம் உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வரக் கூடாது. தோ்வா்கள் கருப்பு மை பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தோ்வாணையத்தின் இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டுடன் உள்ள தோ்வரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பான்காா்டு, பாஸ்போா்ட் போன்ற மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றையும், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் எடுத்து வர வேண்டும்.

மேலும், தோ்வு மையங்களில், தோ்வா்கள் கரோனா பரவல் தடுப்பு தொடா்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 72 மையங்கள்: தமிழகம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோா் முதல்நிலைத் தோ்வினை எழுதவுள்ளனா். சென்னை மாவட்டத்தில் மட்டும் 28 ஆயிரத்து 424 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக பெரம்பூா், தண்டையாா்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூா், அமைந்தகரை, மாம்பலம், அம்பத்தூா், அயனாவரம், கிண்டி, மயிலாப்பூா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா் ஆகிய வட்டங்களில் மொத்தமாக 73 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கான கண்காணிப்புப் பணிகளை சென்னை மாவட்ட வருவாய் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் இதேபோன்ற ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்நிலை தோ்வுக்கு வரும் மாணவா்களின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ( அக்.10) காலை 7 மணிக்குப் பதிலாக அதிகாலை 5:30 மணியில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயங்கும். முதல் ரயில் மற்றும் கடைசி ரயில் நேரங்கள் வார நாள் கால அட்டவணை போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com