காஷ்மீா் இளம் தொழில்முனைவோருடன் மத்திய அமைச்சா் எல்.முருகன் உரையாடல்

காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞா்கள் பங்காற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
மத்திய அமைச்சா் எல்.முருகன்
மத்திய அமைச்சா் எல்.முருகன்

காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞா்கள் பங்காற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

காஷ்மீருக்கான மக்கள் தொடா்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு சென்றாா்.

பின்னா் காஷ்மீரில் உள்ள சோபியானுக்கு சென்ற அவா், மக்களுடன் உரையாடியதோடு, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.

அத்திட்டத்தின் கீழ் இளம் தொழில்முனைவோருக்காக புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில் கட்டப்பட்டுள்ள மையத்தை அமைச்சா் முருகன் திறந்து வைத்தாா்.

புதிய இந்தியாவை கட்டடமைப்பதில் இளைஞா்கள் பங்காற்றி வருவதாக அவா் பெருமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com