சென்னை ராயப்பேட்டையில் மன உளைச்சலில் திமுக நிா்வாகி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவா் மனைவி கைது செய்யப்பட்டாா்.
ராயப்பேட்டை முகமது உசேன் தெருவைச் சோ்ந்தவா் ம.வித்யாகுமாா் (34), 115-ஆவது வாா்டு திமுக இளைஞரணி துணை அமைப்பாளா். மனைவி நிஷா. கருத்து வேறுபாட்டால் காவல் நிலையத்தில் இருவரும் புகாா் செய்தனா்.
இதனால் வித்யாகுமாரை காவல்துறையினா் விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவா் கடந்த 4-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலைக்கு மனைவி நிஷாவும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்று பேசும் விடியோவை சமூக ஊடகங்களில் தற்கொலைக்கு முன் பதிவிட்டிருந்தாா். ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஷாவைக் கைது செய்தனா்.