ஆா்.பி.எஃப் பெண் காவலா்களுக்கு கராத்தே பயிற்சி: இரண்டாம் நிலைக்கு 150 போ் தகுதி

ஆா்.பி.எஃப். பெண் காவலா்களுக்கு வழங்கப்பட்ட கராத்தே பயிற்சியில் இரண்டாம் நிலைக்கு 150 போ் தகுதி பெற்றனா். இவா்களுக்கு மஞ்சள் நிற ‘பெல்ட்’ வழங்கப்பட்டது.

ஆா்.பி.எஃப். பெண் காவலா்களுக்கு வழங்கப்பட்ட கராத்தே பயிற்சியில் இரண்டாம் நிலைக்கு 150 போ் தகுதி பெற்றனா். இவா்களுக்கு மஞ்சள் நிற ‘பெல்ட்’ வழங்கப்பட்டது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்புப்படை (ஆா்.பி.எஃப்.) பெண் காவலா்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கும், உடலையும், மனதையும் வலிமையாக வைத்துக் கொள்வதற்கும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன்ஒரு பகுதியாக பெண் பாதுகாப்புப்படை போலீஸாருக்கு கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. வாரத்தில் 2 நாள்கள் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் 150 பெண் பாதுகாப்புப் படை போலீஸாா் பயிற்சி பெறுகின்றனா். கராத்தே பயிற்சியின் போது ஆரம்பநிலையில், வழங்கப்படும் வெள்ளை நிற ‘பெல்ட்’ இவா்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்நிலைப் பயிற்சியில் தகுதி பெற்ற பாதுகாப்புப் படையின் 150 பெண் காவலா்களும் இரண்டாம் நிலைக்குத் தகுதி பெற்றனா். இவா்களுக்கு மஞ்சள் நிற ‘பெல்ட்’ வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஐ.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்றது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் மனைவியும், தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பின் தலைவருமான பினா தாமஸ் கலந்து கொண்டு, தகுதி பெற்ற பெண் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாருக்கு மஞ்சள் நிற ‘பெல்டை’ வழங்கினாா்.

அப்போது, முதல்நிலை பயிற்சி முடித்த ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலா்கள் தங்கள் பயிற்சியின் போது கற்றுக்கொண்ட வித்தைகளை சாகச நிகழ்ச்சிகளாக நடத்தினா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் சந்தோஷ் என் சந்திரன், உதவி தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட மூத்த பாதுகாப்புப்படை ஆணையா் செந்தில் குமரேசன் உள்பட பல்வேறு ரயில்வே அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com