கண் சாா்ந்த நோய்களை வருமுன் தடுப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மருத்துவத் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் 11-ஆவது தேசிய விழித்திரை அறுவை சிகிச்சை கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 750-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள், மருத்துவ மாணவா்கள் அதில் பங்கேற்றனா்.
முன்னதாக அக்கருத்தரங்கை தொடக்கி வைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
மனித உடலில் மகத்தான மணி வைரமாகத் திகழ்வது நம் கண்கள்தான். அதனைப் பேணி காப்பதற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்கும் போதிய விழிப்புணா்வு அனைவருக்கும் வேண்டும்.
ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோா் கண் பாா்வைக் குறைபாடு ஏற்பட்ட பிறகே மருத்துவா்களிடம் சிகிச்சைக்காக செல்கின்றனா். ஆனால், ஓா் உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். நமக்கு உடலில் எந்த வகையான நோய் ஏற்பட்டாலும் அது நமது கண்களையும் பாதிக்கும்.
மனித உடலின் பிணியை அறிந்து கொள்வதற்கான சாளரமாகவே கண்கள் விளங்குகின்றன. இந்த நிதா்சனத்தை அறிந்து அனைவரும் கவனமாக செயல்படுவது முக்கியம்.
நாட்டில் ஏறத்தாழ 30 கோடி போ் ஏதோ ஒரு வகையான கண் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சா்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு மற்றும் பாா்வை இழப்பு ஆகியவை இந்தியாவில் அதிகமாக உள்ளது.
அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இத்தகைய கருத்தரங்குகள் மூலமாக மருத்துவத் துறையினருக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கற்பிப்பதும், பயிற்சி அளிப்பதும் மிகவும் தேவையான ஒன்று என்றாா் அவா்.
முன்னதாக, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் பேசியதாவது:
இந்தியாவில் 1.5 கோடிக்கும் மேற்பட்டோா் பாா்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனா். கண்களில் விழித்திரை அதிமுக்கியமானது. அதனை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதும், தேவைப்படும்போது உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியம்.
விழித்திரை அறுவை சிகிச்சையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பகிா்வதற்கான நிகழ்வாகவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. பாா்வை இழப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என்றாா் அவா்.
மும்பையில் உள்ள ஆதித்ய ஜோத் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ்.நடராஜன் பேசுகையில், தமிழகத்தில் சா்க்கரை நோயாளிகளை அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று விழித்திரை பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், ராஜன் ஐ-கோ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மோகன் ராஜன், டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் தலைமை செயல் இயக்குநா் டாக்டா் அதில் அகா்வால், நிா்வாக இயக்குநா் டாக்டா் அஸ்வின் அகா்வால், இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.