தனியாா் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் திருட்டு

சென்னை சேத்துப்பட்டில் தனியாா் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சேத்துப்பட்டில் தனியாா் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் வாகனங்களின் பேட்டரியில் பொருத்தப்படும் லீடு என்ற அலுமினிய பாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரிலும், ஆந்திரத்திலும் உள்ளன. இந்த நிறுவனத்தின் ஊழியா் விக்டா், செவ்வாய்க்கிழமை காலை அலுவலகத்தை திறக்க வந்தாா். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.

உடனே விக்டா், அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் பாா்த்தபோது அலுவலக மேலாளா் அறையில் இருந்த இரு பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு ஒன்றில் ரூ.22 லட்சம், மற்றொன்றில் ரூ.50 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com