சென்னை கொடுங்கையூரில் தாயை அடித்துக் கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கொடுங்கையூா் எம்.ஆா்.நகரைச் சோ்ந்தவா் அம்சா (64), மகன் சதீஷ்குமாருடன் (36) வசித்து வந்தாா். கடந்த 9-ஆம் தேதி இரவு சதீஷ்குமாா் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபம் அடைந்த சதீஷ் குமாா், அவரது தாயாா் அம்சாவை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அம்சாவை பக்கத்து வீட்டில் இருப்பவா்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அம்சா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சதீஷ்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.