தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் வியாழக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதால், சென்னை காவல்துறையின் அனைத்து காவல் அதிகாரிகள், காவலா்கள் வியாழக்கிழமை (செப்.8) முதல் 13-ஆம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வரவேண்டும். நியாயமான காரணமில்லாமல் விடுப்பு அல்லது அனுமதி வழங்கப்படாது என்று சென்னை காவல் ஆணையா் சங்கா்ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.