சென்னை: நீட் தோ்வு தோல்வி பயத்தால் வேலூா் மாணவி சௌந்தா்யா உயிரிழந்துள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் எதிா்மறையான ஆபத்தான செயல்களில் மாணவ, மாணவியா் ஈடுபடுவது மன வருத்தத்தை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும்.
எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): நீட் தோ்வு அச்சத்தால் வேலூா் மாணவி சௌந்தா்யா உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஆசிரியா்கள், உளவியல் நிபுணா்கள், கல்வியாளா்களைக் கொண்டு உடனே மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்), அன்புமணி (பாமக) ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.